சனி, பிப்ரவரி 27

இது நல்லா இருக்கா.....

எல்லாருக்கும் வணக்கம்
நல்லா இருக்கீங்களா..........


நம்ம வலை பதிவு நண்பர் ஒருவர்
blog -ல ஒரு செய்தி போட்டு இருந்தாரு....
அது என்ன செய்தின்னா,
நான் ஒரு விஜய் ரசிகன், ஆனா
என் friends எல்லாரும் விஜய ஓட்டுற
மாதிரி எனக்கு sms அனுப்புறாங்க,
உங்களுக்கு யார்னா அஜீத்த ஓட்டி
sms அனுப்புனங்கான தயவு செய்ஞ்சு
அத பதிவா போடுங்க, அப்படின்னு
ரொம்ப வருத்தப்பட்டு எழுதியிருந்தார்....
நானும் எங்கெல்லாமோ தேடினேன்,
ஆனா எந்த பிரயோஜனமும் இல்ல....

எனக்கு வந்த sms எல்லாம் விஜய ஓட்டி
தான் வந்துது.......
இதோ சில smaples........


1.கில்லின்னு சொல்லிட்டு கபடி ஆடுவாரு
போக்கிரின்னு சொல்லிட்டு போலீசா வருவாரு
குருவின்னு சொல்லிட்டு கழுகு மாதிரி பறப்பாரு
வில்லுன்னு சொல்லிட்டு gun வச்சு சுடுவாரு
இப்போ வேட்டைகாரன்னு சொல்லிட்டு
ஆடோகாரான வராரு.....
என்ன ஒரு புத்திசாலித்தனம்..........


2.விஜய்யின் அடுத்த படங்கள்:
I.சுறா,
II .போலிஸ்(கவுதம் மேனன்)
III .புயல்(தரணி)
IV .இருள்(செல்வராகவன்)
V No.1 .(கே.எஸ்.ரவிகுமார்)
VI .ஆண்டவன்(ஷங்கர்)
VII .சிறை(அமீர்)
விஜய்யின் மனைவி: என்னங்க
எழுந்துருங்க மணி 7 ஆச்சு.
விஜய்: ஐயோ எல்லாம் வெறும் கனவா....



3. சென்னை பீச்சுல ஒரு சுறா செத்து
போயிடுச்சாம், போலிஸ் விசாரணை
பண்ணதுல விஜயோட அடுத்த
படத்தோட டைட்டில் சுறான்னு
தெரிஞ்சவுடனே சுறா தற்கொலை
பண்ணிகுச்சாம்.....




கடைசியா விஜய் ரசிகர்களுக்கு
ஒரு ஆறுதலான மேட்டர்.....
டீச்சர்: சோழனை பத்தி சொல்லு?
மாணவன்: கரிகாலன் கால போல
கருத்திருக்கு கொழலு?
டீச்சர்: நம்ம தேசிய விலங்கு எது?
மாணவன்: புலி உறுமுது...
புலி உறுமுது....
டீச்சர்: தேசிய மலர் எது?
மாணவன்: ஒரு சின்ன தாமரை என்
கண்ணிலோ பூத்துதே....
டீச்சர் மாணவனை அடிக்க வர்றாங்க...
மாணவன்: நான் அடிச்சா தாங்க
மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட
மோதி பாரு வீடு போயி சேர மாட்ட
டீச்சர் மாணவன் மண்டைல குட்டுறாங்க
மாணவன்: என் உச்சி மண்டைல சுர்ருங்குது....